Wednesday, 27 September 2017

தொழிற்குல தெய்வம்

தொழிற்குல தெய்வம் 
----------------------------------

ஒவ்வொரு தொழில் செய்வபவரும் ஒரு தொழிற் தெய்வத்தை வணங்கும் வழக்கம் உண்டு 
எடுத்துக்காட்டாக வண்ணார் - மயிலார் என்ற தெய்வத்தை வணங்குவர் ..

பண்டைய நில வணிகர்
கோவேறு கழுதை சாத்தாகவும் , 


குதிரை சாத்தாகவும்
நெடுந்தொலைவு சென்று வணிகம் செய்ததால்
தம் தெய்வத்தை சாத்தன்
என்று பெயரிட்டதாக தெரிகிறது ,
அவனுக்கு ஐயனார் என்றும் பெயர் .

நெடுஞ்சாலை வழியெங்கும்
ஆங்காங்கு ஊருக்கு புறம்பாக சாத்தன் கோவில் அமைந்திருப்பதால்
அவன் புறம்பணையான் (சிலம்பு 9-12) எனப்பட்டார் .

அவன் கோவிலில் உள்ள சுடுமண் குதிரை - குதிரை சாத்தை நினைவுறுத்தும்

பாவாணர் எழுதிய தமிழர் மதம் நூலிலிருந்து
www.vaaa.in

சாணாருட்டாம் வண்டும் சீமை கருவேல மரமும் நமது சமூகமும்

சாணாருட்டாம் வண்டும் சீமை கருவேல மரமும்
நமது சமூகமும்
-----------------------------------------------------------------------------
வெள்ளையர்கள் 
ஆத்திரேலிய கண்டத்தை கண்டுபிடித்தவுடன் ..
அங்கு மாடுகளை கொண்டு சென்றனர் ...

மாட்டு பண்ணை அமைத்தனர் ...
அப்போது ஒரு சிக்கல் தோன்றியது ..
சாணியை தரைக்கடியில் கொண்டு சேர்க்கும் சாண உருட்டான் வண்டு ஆத்திரேலியாவில் இல்லை ...
பின்பு வெளிநாடுகளிலில் இருந்து
அந்த வண்டை
அங்கு கொண்டு சென்று அந்த பிரச்னை தீர்த்தனர் ..
.........................................................................................
சீமை கருவேல மரத்துக்கும் அந்த தீர்வை சிந்திக்கலாம் ..எங்கு இருந்து வந்ததோ அந்த தேசத்தில் அதற்கு எதிர் உயிரி எது என கண்டறியலாம் .......................................................................................
நமது சமூகத்திலும் அது தான் சிக்கல் ..
அயல் தேசத்து மக்கள் ,
அரசியல் சித்தாந்தம் ,
அறிவியல் ,
வியாபாரம் ,
விவசாயம் ,
மருத்துவம்,
மதம் போன்றவை அளவுக்கதிகமாக வளர்ந்து
நமது ...............அழித்துவிட்டது...
தீர்வு .எப்படி ?
உங்களுக்கு தெரியுமா ?

காவிரி நீருக்காக தவிக்கப் போகும் கர்நாடகா..

கர்நாடக மலைப்பகுதிகள்
-----------------------------------------
கர்நாடகத்தில் சாயத்ரி மலைத்தொடர் எனவும் தமிழகத்தில் ஆனைமலை, நீலகிரி மலைத்தொடர் எனவும்
கேரளாவில் மலபார் பகுதி, அகத்திய மலை எனவும் அழைக்கப்படுகிறது
.தென் இந்தியாவின் பல முக்கிய ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உருவாகுகின்றன.
இங்கு உருவாகி கிழக்கு நோக்கி தக்காண பீடபூமி வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடா வில் கலக்கும் முக்கியமான ஆறுகள் சில
கோதாவரி,
கிருஷ்ணா,
காவிரி
மற்றும் தாமிரபரணி
*****************************************************************
காவிரி ஆறு
------------------
காவிரி ஆறு (Cauvery river) அல்லது காவேரி ஆறு இந்தியத் தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது.
அது கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் சம மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது.
கபினி, ஹேமாவதி, ஹாரங்கி , லட்மண தீர்த்தம் , ஆர்க்காவதி , சிம்சா, சொர்ணவதி ஆகியவை கர்நாடக பகுதியில் பாயும் துணை ஆறுகள். பவானி, அமராவதி, நொய்யல் ஆகியன தமிழக பகுதியில் பாயும் துணை ஆறுகள் ஆகும்
*****************************************************************
காவிரி நீர் குறைவுக்கு காரணம்
--------------------------------------------------
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதில்
ஆக்ரமிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது ..
என்ன விதமான ஆக்ரமிப்பு ?
வெள்ளையர் காலத்திலிருந்து
மலை மக்களை துரத்துவது .
அவர்கள் இடங்களை ஆக்கிரமிப்பது ,
காடுகளை அழிப்பது என ஆரம்பித்து வைத்தார்கள் .

இன்று அது பெருகி
கிட்டத்தட்ட மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் ...


டீ , காபி எஸ்டேட் உருவாக்குவது ,
உல்லாச விடுதிகள் உருவாக்குவது
காகித ஆலைகளுக்கான மரங்கள் வளர்ப்பது ,கனிமங்களை வெட்டி எடுப்பது என
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி முழுவதும்
கிட்டத்தட்ட அதன் பகுதிகள் அதன் இயற்க்கை தன்மை குலைக்கப்பட்டுவிட்டன..
இன்று தண்ணீர் தர முடியாது
என மறுக்கும் கர்நாடகம்
நாளை அதற்க்கே
காவேரி தண்ணீர் இல்லாமல் தவிக்க போகிறது
-------------------------------------------------------------------------
கீழ் கண்ட சில இணைய குறிப்புகளை பார்க்கவும் ...
***************************************************************
1- கஸ்தூரிரங்கன் அறிக்கை:
மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு பற்றிய கஸ்தூரிரங்கன் அறிக்கையில் மலையில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும், மணல் குவாரிகள், சுரங்க பணிகள் தடைசெய்யவேண்டும், 20,000 சதுர மீட்டர்களுக்கு மேல் கட்டுமானம் கூடாது, 50,000 ஹெக்டேருக்கு மேல் வீடுகள் கட்டக்கூடாது போன்ற கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன தமிழ்நாட்டு மலை பகுதிகளில் புதிதாக பட்டா வழங்கக்கூடாது. புதிய விவசாய பகுதிகள் விஸ்தரிக்கக்கூடாது. புதிய குடியிருப்புகள் கட்டக் கூடாது. வளர்ச்சி திட்டங்கள் எதையும் செயல்படுத்தக்கூடாது, அதாவது, பள்ளி, மருத்துவ மனை, மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, போக்குவரத்து ஆகியவை கூடாது. என்ற கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன .
---------------------------------------------------------------------------------
.
2-சிக்கமகளூருவை காபி நாடு என்றும் அழைப்பர்
* குடகு மாவட்டத்தை ஆரஞ்சு மாவட்டம் என்று அழைப்பர்
--------------------------------------------------------------------------------
3- ஒரு விளம்பரம்
------------------------------
மலைப்பகுதியில் பண்ணை வீடு வாங்க வேண்டுமா?

பெங்களூர்: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பண்ணை வீடு வாங்க நினைக்கிறீர்களா?
நீங்கள் தேடும் வீடு கிடைத்துவிட்டது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சக்லேஷ்புர் என்ற மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பண்ணை வீடுகளை விற்பனை செய்கிறது ------- நிறுவனம்.

Saturday, 23 September 2017

உலகம் ரொம்ப பெருசுலே ...

நாம என்ன சொல்றோம்னே புரிஞ்க்கிறது இல்ல
மண்டைக்கு மேல எல்லாருக்குமே கொம்பு மொளச்சமாதிரி ...
ஊருல இருக்கவன் எல்லாம் கூமுட்டை
இவக ...
உலக மகா அறிவாளி 
நாம மட்டுந்தேனு பேசுறது...
உலகம் ரொம்ப பெருசுலே ...
சின்ன பிள்ளையெல்லாம் அந்தப்பக்கம் ஓரமா போயி விளையாடுங்க ...போங்க

தமிழக வரலாற்று நூல்கள்

தமிழக வரலாற்று நூல்கள் 

கலப்பு திருமணம்

கலப்பு திருமணம்
அதிகம் நடக்கும்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா
ஆகிய நாடுகளில் தான்
Genetic disorder என்ற நோய் அதிகம்...
ஆனால்
பல்லாயிரம் நுற்றண்டுகளாக
சொந்த சாதியில்
சொந்தத்தில் மட்டுமே திருமணம் செய்துவரும் இந்தியாவில் 1% மட்டும் தான்
Genetic disaster இருக்கிறது ..!!
சோழராஜன் அ
#Thaks_to_bio_informatics_center
#marriage_own_community
சென்ற வருடம் நான் போட்ட பதிவு 21.3.2016
சோழராஜன் அ அவர்களின்
முகநூல் பதிவிலிருந்து


சிறு தெய்வ வணக்கம் எத்தனை வகை ?

சிறு தெய்வ வணக்கம் எத்தனை வகை ?
--------------------------------------------------------------
எத்தனை மதங்கள் வந்தாலும் 
எத்தனை கடவுட் கொள்கை வந்தாலும்
அதற்காக அரசுகள் ,மத நிறுவனங்கள் 
எத்தனை போர்கள் ,கொலைகள், அடக்குமுறைகளை செய்தாலும்
உண்மை மறைவதில்லை ..
உலகம் முழுக்க மக்கள் சிந்தனையில் சிறு தெய்வ வணக்கம் எனப்படும்
மக்களின் தெய்வங்கள் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர்...
---------------------------------------------------------------------------
ஏறத்தாழ 13 வகை தெய்வ வணக்கம் உலகத்தில் உள்ளது ..
1-பேய் வணக்கம்
2- கடிமரம் (மரவணக்கம் )
3- நாற்பூத வணக்கம் - நிலம், நீர் ,காற்று .தீ
4-இரு சுடர் வணக்கம் - சூரியன் , நிலவு
5- நல்விலங்கு - ஆ (பசு) வணக்கம்
6-நச்சுயிரி வணக்கம் - பாம்பு
7- வதி தெய்வம் - மலை ,சோலை
8- ஐந்திணை வணக்கம்
9- காவல் தெய்வம் - கிராம , ஊர் காவல் தெய்வங்கள்
10- கருதுகோள் தெய்வம் - திருமகள் (செல்வம் ), நாமக்கல் (கல்வி ),கூற்றுவன் (மரணம்)
11 - பாராட்டு தெய்வம் - நடுகல் ,பத்தினி தெய்வம்
12- இல்லுறை தெய்வம் - வீடு சாமி , குடும்பத்தில் வழிபாடும் தெய்வம்
13 -தொழிற்குல தெய்வம் - சாத்தன் (ஐயனார் ), வண்ணார் (மயிலார்) போன்று
அடுத்த பதிவுகளில்
ஒவ்வொன்றை பபற்றியும் தனி தனியாக பார்ப்போம்

Monday, 18 September 2017

மூவகை தெய்வ சிந்தனைகள்

மூவகை தெய்வ சிந்தனைகள்
----------------------------------------------
உலகில் கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாக
( இன்று வரை )
மூன்று வகை தெய்வ சிந்தனைகள்

நடைமுறையில் உள்ளன ..
1 மக்கள் தெய்வங்கள் ( சிறு தெய்வ வழிபாடு )

2 மத தெய்வங்கள் (பெருந் தெய்வமதம் )

3 கடவுட் கொள்கை

மூவேந்தர் ஒழுக்கத்துடன் கூடிய தூய குடியினர்

மூவேந்தர் ஒழுக்கத்துடன் கூடிய தூய குடியினர்
பொதுவாக மனம் ஆசை வயப்படுவது
அதை கல்வியை கொண்டு கட்ட வேண்டும்
ஆனால் 
அடங்காமல் ஓடுவதே மனத்தின் தன்மை ...
மூவேந்தர் ஒழுக்கத்துடன் கூடிய தூய குடியினர்
அதனால் பொதுவான மனஇயல்பு அவர்களின் தூய்மையை கெடுப்பதில்லை
அவர்களுக்கு குறைகளை உண்டாக்க முடிவதில்லை
முத்தமிழ் மதுரை நூலிலிருந்து -( புலியூர் கேசிகன்)

கீழத்தூவல்

ஆயின ஆண்டுகள் அறுபது
போர்குடிகளுக்கு
கண்ணீரும்
செந்நீரும் 
உயிரிழத்தலும்
சாதாரணமானது
ஆனால்
எதற்காக?

சுதந்திரம் என்பது

சுதந்திரம் என்பது
மாற்றாரிடம் அடிமையாகும் முன்பு
நமக்கு என்ன உரிமை இருந்ததோ
அதை பெறுவது ...

www.vaaa.in
The Online Book Shop

கந்தன்

கற்றூண்களில் தெய்வ உருவம் பாதிப்பதை 

கந்திற்பாவை என்கிறது மணிமேகலை ...

கந்தில்
(கல் தூண்களில்) பாதிக்கப்பட்டதால் 
முருகன் 
கந்தன் 

என அழைக்கப்பட்டான் - தமிழர் மதம் -
பாவாணர்


The Online Tamil Bookshop

பலவீனமான அரசியல் சக்தி

சீனா அமெரிக்காவை தேர்ந்தெடுத்தது
இந்தியா பாகிஸ்தானை தேர்ந்தெடுத்தது
இன்று சீனா இந்தியா இடையே எவ்வளவு இடைவெளி
முக்குலத்தோர்க்கு முன்பு
நவாப்கள்
நாயக்கர்கள்
ஆங்கிலேயர்கள் எதிரிகளாக இருந்தனர்
இப்போது ?
எப்போது சக தமிழ் சாதிகள் எதிரிகளானார்களோ
அப்போதிருந்து தான் பலவீனமான அரசியல் சக்தியானோம்
https://www.facebook.com/murugesan.sankari
பராக்கிரம பாண்டியன்
தென்காசி
www.vaaa.in
The Online Book shop

மதத்திற்கும் இனத்திற்கும் உள்ள வித்தியாசம்

மதத்திற்கும் இனத்திற்கும் உள்ள வித்தியாசம்

 ஈழபடுகொலையில்
 வட இந்திய இந்துக்கள் வருந்தவில்லை
என்பதும்
மியான்மர்
 இஸ்லாமியர்களுக்காக
உலக முஸ்லீம்நாடுகள் வருந்தவில்லை
 என்பதையும் பார்த்து உணரவேண்டும் 

உலக அரசியலுக்கு தேவையென்றால் பயன்படுத்திகொள்வர்

பராக்கிரம பாண்டியன்
தென்காசி
www.vaaa.in
The Online Tamil Bookshop

பாரதி - சொல்வதற்கு எதுவும் இல்லை

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்


--பாரதி -

சொல்வதற்கு எதுவும் இல்லை
WWW.VAAA.IN
THE ONLINE TAMIL BOOK SHOP

கல்கி (கல்யாணி கிருட்டிணமூர்த்தி

பொன்னியின் செல்வனையும் காவிரியையும் தமிழர்களின் நெஞ்சத்தில் நிறைத்தவர்...

சோழர் பெருமையை மக்கள் உள்ளத்தில் நிறுத்தியவர்...
கல்கி (கல்யாணி கிருட்டிணமூர்த்தி )

உறங்காப்புலி மூக்கையா தேவர்

பழங்காலத்தில்
கண்துஞ்சாது படை நடத்தி
களம் காண்பவர்கள் உறங்காப்புலி
என சிறப்பாக பாராட்டப்பட்டனர் ..

சமீப காலத்தில்
இவர் சமுகப்பணியில்
அத்தகைய சிறப்பு பெற்றவர் ...

தமிழகத்தில் கொண்டாடப்பட்ட திருவோணம் திருநாள்

திருஓணம் திருநாள் வாழ்த்துக்கள்...
தமிழகத்தில் கொண்டாடப்பட்ட திருவோணம் திருநாள்
----------------------------------------------------------------------------
சங்க கால நூல் மதுரைக்காஞ்சி இவ்விழா மதுரையில் எவ்வாறு கொண்டாடப் பட்டதென அழகுற விவரிக்கிறது…!
திருஓணம் திருநாள் வாழ்த்துக்கள்...
தங்களுடைய மன்னனான மாவலியை மறவாத சேர நாட்டு மக்களுக்கும்
தமிழகத்தில் சேதிநாட்டு தலைநகரான திருக்கோவிலூரில் கோவில் கொண்டிருக்கும் உலகளந்த பெருமாளை
வணங்கும் மக்களுக்கும்
-------------------------------------------
ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்.----------------------------------------------

மாவேலி மன்னன் நாடு காண வரும் இந்த திருவிழா அத்தம் தொடங்கி பத்து நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும்…
மலையாள மங்கைகள் கைக்கொட்டி ஆடும் திருவாதிரை நடனமும் ,
 புலிக்களியும், 
செண்டை மேளமும் கண்களில் நிறையும்…!
--------------------------------------------------------------------------------------
இவ்விழாவை ஒரு அன்னியமாக பார்க்கவேண்டியதில்லை…இதுவும் ஒரு தமிழர் விழாவே..
--------------------------------------------------------------------------------------
சங்க கால நூல் மதுரைக்காஞ்சி இவ்விழா மதுரையில் எவ்வாறு கொண்டாடப் பட்டதென அழகுற விவரிக்கிறது…!
--------------------------------------------------------------------------------------
தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் மாங்குடி மருதனார் பாடியது…

“கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்
மாயோன் மேய ஓண நல் நாள்
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக் கை
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்
மாறாது உற்ற வடுப் படு நெற்றி
சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங்களிறு ஓட்டலின் காணுநர் இட்ட
நெடுங்கரைக் காழகம் நிலம் பரல் உறுப்ப
கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…”
--------------------------------------------------------------------------------------

ஓணத் திருநாளை மறவர்கள் பெரிய விழாவாகக் கொண்டாடுவார்கள்.
அடிக்கடி போர் செய்வதால்
அவர்களுடைய உள்ளங்கையில் ஆயுதங்களின் தழும்புகள் விழுந்திருக்கும்.
ஓணம் மாயோனான திருமாலிற்கு எடுக்கும் முக்கிய விழா…! 

--------------------------------------------------------------------------------------
அவர்களுடைய யானைகளும் வீரம் செறிந்தவைதான்.
அவற்றின் முகத்தில் அங்குசம் குத்திக் குத்தி வடு விழுந்திருக்கும்,
எதிரியின் யானைகளோடு கடுமையாக முட்டி மோதுவதால்
அவற்றின் தந்தங்கள் இந்த யானைகளின் நெற்றியில் வடுவாகப் பதிந்திருக்கும்.
ஓணத் திருநாளன்று மறவர்கள் தங்களுடைய பெரிய யானைகளை மோதவிடுவார்கள்.
இந்த யானை அணிவகுப்பையும் மோதலையும் மக்கள் கண்டு இன்புறுவர்…

-------------------------------------------------------------------------------------
-இவ்வாறு ஓணம் நாளன்று நம் தமிழர்கள் மற விளையாட்டுகளை நடத்தி மகிழ்ந்துள்ளனர்

என்பதை மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனார் குறிப்பிடுகிறார்.
WWW.VAAA.IN
தமிழ் நூலகள் விற்பனை இணையம்

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...