காலத்தின் தீர்ப்போ ?
----------------------------------
தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பனர்கள் முயன்றுகொண்டே இருக்கிறார்கள். இராசகோலாச்சாரியாருக்குப் பிறகு நீண்ட நாள் அவர்கள் கனவு பலிக்கவில்லை !
பார்ப்பனர் அல்லாத கருணாநிதிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தார் பாபநாசம் சிவனின் தமையனார் இராசகோல அய்யரின் மகள் வி.என். சானகியின் கணவரான ம.கோ.இரா (M.G.R) !
அவர் மறைவுக்குப் பிறகு இராசகோபால அய்யரின் மகள் வி.என்.சானகி சில நாள் முதல்வராக இருந்தார் !
அவருக்குப் பிறகு செயராம அய்யங்காரின் மகள் செயலலிதா முதல்வராகப் பல காலம் ஆட்சித் தவிசில் அமர்ந்திருந்தார் !
இப்பொழுது பரமக்குடி சீனிவாச அய்யரின் மகன் கமலகாசன் முதல்வராக ஆக முடியுமா என்று முயன்று கொண்டிருக்கிறார் !
இன்னொரு பக்கம் ஒய்.ஜி.பார்த்தசாரதி அய்யரின் மகள் லதாவின் கணவர் சிவாசி ராவ் (இரசினிகாந்த) ஆட்சியைப் பிடிக்க மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் !
தமிழன் ஆரியர்களுக்கு அடிமையாகவே இருக்க வேண்டும் என்பது தான் காலத்தின் தீர்ப்போ ?
-----------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி.2051, சுறவம் (தை),23]
{06-02-2020}
No comments:
Post a Comment