Friday, 1 June 2018

புதைப்பதும் எரிப்பதும்



மனிதர்கள் மரணம் அடைந்தவுடன் 
புதைப்பதும் 
எரிப்பதும் 
உலகம் முழுதும் நடைமுறையில் உள்ளது
நமது முறை என்ன ? 
எனும் போது 
திருமூலரின் கருத்தை 
உற்றுநோக்க வேண்டியுள்ளது .
சாதாரண மனிதர்களை
எரிக்கலாம் அல்லது புதைக்கலாம் 
ஆனால்
ஞானிகளை , சமாதி அடைந்தவர்களை 
புதைக்க மட்டுமே செய்ய வேண்டும் .
நமது முறையில்
அடுத்து 
அவர்களை புதைத்த இடத்தில் 
லிங்கம் 
அல்லது ஆல் , அரசு போன்ற மரங்களை 
நட வேண்டும்
அவ்வாறு இல்லாமல் அவர்கள் எரித்தால் 
சுற்று பகுதிக்கு 
சரியான மழை இல்லாமல் 
பஞ்சம் ஏற்படும் என்கிறார்.
ஆக 
ஞானிகளை புதைப்பதும் 
மற்றவர்களை எரிப்பதும் 
சரியே
வள்ளல் போன்றவர்கள் 
புதைக்க சொல்வது
மீண்டும் உயிர்த்து வருவது
என்பதெல்லாம்
அந்த ஞானிகளின் 
அளவற்ற
கருணை மிக்க
சிந்தையே தவிர வேறில்லை .
உண்மை வேறு

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...