Tuesday, 11 February 2020

#முருகன் திருமணம் ... சில விவாதங்கள் .. -1




#முருகன்
திருமணம் ... சில விவாதங்கள் .. -1
**************************************************************
முருகனுக்கு ஒரு மனைவியா?...
இரண்டு மனைவியா?...
.
வள்ளியா? தேவயானியா?
.
முருக கடவுளின் வரலாற்றில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் குழப்பங்களை தீர்க்க..
.
முருகன் வரலாற்றை மூன்று பகுதிகளாக பிரிக்க வேண்டும்.
.
1- குறிஞ்சித் திணை தெய்வமான முருகன்
2- தமிழ் கடவுளான முருகன்
3- புராணக் கடவுளாக உருவகம் செய்யப்பட முருகன்
.
.
குறிஞ்சித் திணை தெய்வமான முருகன்.
வள்ளி திருமண கதை முழுவதுமே
குறிஞ்சித் திணையில் நடைபெற்ற நிகழ்வுகள் தான்.
.
குறிஞ்சி பகுதியான
மலையும் மலை சார்ந்த பகுதியில் இருக்கும்
மயிலும், யானையும்
முருகனின் வாகனமாக சிற்பங்களில் காணக் கிடக்கின்றன.
.
பெரும்பாலோர் மயில் மட்டுமே முருகனின் வாகனமாக நினைக்கின்றனர்.
.
ஆனால் தமிழக காட்டுபகுதிகளில் அதிகமாக இருந்த யானையும் முருகனின் வாகனமாக இருக்கிறது.
.
இந்த யானைதான் வள்ளியா? தெய்வானையா? என்ற சிக்கலை அவிழ்க்க உதவி இருக்கிறது.
.
காட்டு பகுதியில் இருக்கும் யானையால் ஏற்பட்ட அபாயத்தில் இருந்து வள்ளியம்மையை காப்பாற்றிய நிகழ்வுதான் ...கந்தனுக்கு பிள்ளையர் உதவியதாக பிற்காலத்தில் கதையாக்கப்பட்டுள்ளது
.
திணைப்புனம் காத்தாள் வள்ளி என்பது குறிஞ்சி நில மகளீரின் தொழில்
.
வள்ளி என்ற பெயரின் காரணத்தை தேட
பெரிய சிந்தனை எதுவும் தேவையில்லை.
வள்ளி கிழங்கு அகழ்ந்த குழியா?
வள்ளி கொடியா?
புள்ளிமான் வயிற்றில் பிறந்தவளா என
வள்ளி என்ற பெயரும் வைக்க....
காரணம் தேட வேண்டிய அவசியம் இல்லை....
.
தமிழர்கள் இயற்கை வாழ்வினர் நதியின் பெயரும், மரத்தின் பெயரும், மலரின் பெயரும், விலங்கின் பெயரும் என இயற்கை பெயர்களை வைப்பது இங்கு இயல்பான ஒன்று. ஆகையால் வள்ளி என்று பெயர் வைக்க காரணம் எதுவும் தேவையில்லை.
.
19....,20.....,21..... ம் நூற்றாண்டில்
திடீரென முளைத்த அரசியல், சமூக விஞ்ஞானிகள் முருகன் முதன்முதலில் கலப்பு திருமணம் செய்தவர் என அதிபயங்கர கண்டுபிடிப்பை நிகழ்த்தியதாக சொல்லிக் கொள்கிறார்கள்.
.
முருகனோ, குறிஞ்சி நிலக்குறவன், வேடன்,
வள்ளியம்மையோ குறிஞ்சி நிலக்குறத்தி ,
மற்றொரு குறிஞ்சி நில வேட்டுவ தலைவனின் மகள்
இதில் எங்கு இருந்து கலப்பு மணம் வந்தது என்று தெரியவில்லை.
காமாலை கண்டவனுக்கு கண்டது எல்லாம் மஞ்சள் என்பது போல
இவர்கள் அரசியல் வியாபரத்துக்கு
அவரை வம்புக்கு இழுக்கிறார்கள்.
.
ஆக
வள்ளித் திருமணம் கதை முழுவதுமே
சங்க இலக்கிய மரபுபடி அக வாழ்க்கையை கொண்ட நிகழ்ச்சிகள் தான்.
அது திணைபுனம் காப்பதாக இருக்கட்டும்,
குறி கேட்ப்பதாக இருக்கட்டும்,
வேலன் வெறியட்டு நிகழ்த்துவதாக இருக்கட்டும்
அனைத்துமே சங்கத் தமிழ் மரபு தான்.
முருகன் தமிழர்களின் மிகப் பழமையான தெய்வம்
குறிஞ்சி நில தெய்வம்.
..
ஐந்திணை தெய்வங்களில் குறிஞ்சி முருகன்
சேயொன், சிவந்தவன்- சிவனாக மாறி சைவ மதத்தின் முழு முதற் கடவுளாக பரிணமித்தான்.
.
முல்லை நில மாயவன், திருமாலாக வைணவமத கடவுளாக மாறிப்போனான்.
.
இவர்கள் இருவரும் பெருந்தெய்வங்களாக பெருந்தெய்வ மதங்களின் கடவுளர்களாக நிலைபெற்றனர்.
.
மருத நிலத் தெய்வமான இந்திரன். தேவர்களின் தலைவனாக தேவேந்திரனாக பிற்க்கலத்தில் மாறிப்போனான்.
.
நெய்தல் தெய்வமான வருணன் புத்த மத தாக்கத்துக்கு பிறகு மணிமேகலை தெய்வமாக கடல் காவல் தெய்வமாக மாற்றம் பெற்றது.
.
பாலை தெய்வமான கொற்றவை இன்றுவரை போர்குடிகளின் தெய்வமாக போர்க்குடியான முக்குலதோர்களால் தாயாக வணங்கப்படுகிறாள்.
.
ஆக
முருகனுக்கு வள்ளி மனைவி என்பது உறுதியாகிறது.
மேலும்
சிவ்னாக
முருகன் பரிணமித்து இருப்பதால்
.
சக்தியை தன் உடலில் பாதியாக கொண்ட
ஆணுக்கு பெண் சமம் என்ற
சிவசக்தி தத்துவத்தின்
அடிப்படை உருவாக காரணமான முருகன்
இரண்டு மனையாளை கொண்டிருக்க முடியது
என்பது முடிபு.
.
வள்ளி மட்டுமே மனைவியாக இருக்க முடியும் என்பதை கண்டோம்.
.
அப்படியானால் தேவயானி யார் என்பதை அடுத்து பார்ப்போம்
தொடரும்...

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...